Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.

Government Arts and Science College, Pappireddipatti

முப்பெரும் விழா

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா 22.03.2024 அன்று காலை 10.30 மணியளவில் திருவள்ளுவர் கலையரங்கத்தில் தமிழ்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது. இவ்விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணாக்கர்கள் மற்றும் அனைவரையும் இயற்பியல் துறைத் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் வீ.ரவி, அவர்கள் வரவேற்று உரையாற்றினார். அடுத்ததாக கல்லூரி முதல்வர் முனைவர் வே.அன்பரசி, அம்மா அவர்கள் கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்து சீரியதொரு தலைமையுரையாற்றினார். அதனை அடுத்து விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த உடற்கல்வி இயக்குனர்(பொ) திரு. த. அருண்நேரு அவர்கள் விளையாட்டு விழாவிற்கான அறிக்கையை வாசித்து, இக்கல்வியாண்டில் நடைபெற்ற விளையாட்டு விவரங்களை தொகுத்தளித்தார். அதனை தொடர்ந்து கணிதவியல் துறைத்தலைவர் முனைவர் கோ.ஐயப்பன், அவர்கள் சிறப்பு விருந்தினர் திரு.சபரீஷ்மோகன்குமார், நிர்வாக இணை இயக்குநர் ஈஸ்ட் வெஸ்ட் ஃபார்மா, சேலம் அவர்களை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் திரு.சபரீஷ்மோகன்குமார், அவர்கள் மாணாக்கர்களுக்கான ஒழுக்கத்தையும், போதைப்பொருளின் பின் விளைவுகளையும் எடுத்துக்கூறி நல்வழிக்கான போதனைகளை கூறி சிறப்புரை ஆற்றினார். சமூகவியல் துறைத்தலைவர்(பொ) முனைவர் பொ.செந்தில்குமார், அவர்கள் சிறப்பு விருந்தினர் திரு மு.அசோக்குமார், இ.கா.ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(ஒய்வு) அவர்களை அறிமுகம் செய்தார். அடுத்து சிறப்பு விருந்தினர் திரு மு.அசோக்குமார், அவர்கள் பேசும்பொழுது மாணாக்கர்கள் தன்னுடைய இலட்சியக் கனவுகளை மட்டும் தொடர்ந்து செயல்படுத்தினால் போதும் உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம் என்று கூறி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் டி.க.சித்திரைச் செல்வி, அவர்கள் சிறப்பு விருந்தினர் முனைவர் க.தமிழரசி, முதல்வர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எடப்பாடி அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர் முனைவர் க.தமிழரசி, அவர்கள் கல்வியே மனிதனின் அறிவுக்கான ஆணிவேர் என்று கூறி சிறப்புரை நல்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகளில் மாவட்ட அளவிலும், கல்லூரி அளவிலும் கலந்து கொண்ட மாணாக்கர்களுக்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நூலகர் முனைவர் கி.ச.கல்யாணி, அவர்கள் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் தங்கப்பதக்கம் வென்ற சமூகவியல் துறை மூன்றாமாண்டு மாணவி கோகிலாவிற்கு ரூ.10000/- பரிசளித்தார். மேலும், மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவாக வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் வே. பசுபதி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவினை தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் அ.சுபா, அவர்கள் மிகவும் சிறப்பாக தொகுத்துரைத்தார். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI