Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

Student Orientation Programme for Freshers - 2024

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (10.7.24), முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி முழு நாள் நிகழ்வாக நடைபெற்றது. நிகழ்விற்கான தலைமையுரையினை முதல்வர் முனைவர் வீ.இரவி (மு.கூ.பொ) அவர்கள் நல்கினார். தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர்.பொ.செந்தில்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் முன்னாள் முதல்வர் வே.அன்பரசி அவர்கள் கல்வி கரையில என்ற தலைப்பிலும், திரு. இரா. வில்சன் ராசசேகர், வருவாய் கோட்டாட்சியர் அரூர் அவர்கள் இலக்கும், வெற்றியும் நம் கையில் என்ற தலைப்பிலும், திரு. இரா.கோபிநாத், முதன்மை இயக்குனர் BNI சேலம் அவர்கள் கையருகில் வானம் என்ற தலைப்பிலும் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினர். வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பேசும் பொழுது, "அரசுப்பள்ளியில், அரசு கல்லூரியில் பயின்றாலும், அரசுப் பணியாளராகவும், வெற்றியாளராகவும் பரிணமிக்க முடியும் என்பதற்கு சேலம் அரசு கல்லூரியில் பயின்ற தானும், அதே கல்லூரியில் பயின்ற மற்ற இரு சிறப்பு விருந்தினர்களுமே சிறந்த நிகழ்கால உதாரணங்கள் என்றார். தனக்கான இலக்கினை நிர்ணயித்து கடின உழைப்போடு முயற்சித்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்" என அறிவுறுத்தினார். திரு.கோபிநாத் அவர்கள் பேசும் பொழுது, "ஏன் என்ற கேள்வியினை கேளுங்கள் , அதுவே வெற்றியாளராக முதல் தகுதி என்றார். அரசு பல்வேறு திட்டங்கள் வாயிலாக இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதனை நன்கு பயன்படுத்தி மாணவர்களும் நாளைய தொழில் முனைவோர்களாக பரிணமிக்க முடியும்" என்றார். முனைவர் வே.அன்பரசி அவர்கள் பேசும் பொழுது, " மாணவர்கள் பாட அறிவோடு, தங்களுக்கான மொழி ஆளுமை திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும். எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒரே புள்ளியில் இருந்தால் வெற்றி வசமாகும் என்றார். நூலகர் கி.ச.கல்யாணி நன்றியுரை நல்கினார்.நிகழ்வினை அழகுறத் தமிழில் தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர்.இ.சுஜிதா தொகுத்து வழங்கினார். மாணவ, மாணவியர்கள், கேள்விகளை ஆர்வத்துடன் தொடுத்து பங்கேற்றனர். அனைத்து மாணவர்களும், துறைத் தலைவர்களும், கெளரவ விரிவுரையாளர்களும், அலுவலகப் பணியாளர்களும் நிகழ்வில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI